இலங்கை
உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி!

உயர்தரப் பரீட்சையில் கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே கைத்தொலைபேசி பயன்படுத்த அனுமதி!
நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் போது கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார்.
திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில், உதவி அதிபர்கள் அல்லது ஊழியர்கள் இம்முறை கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனத் தெரிவித்தார். (ப)