இந்தியா
கர்நாடகா போவி கார்ப்பரேஷன் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மரணம்; ஆடையைக் கலைந்த சி.ஐ.டி அதிகாரி

கர்நாடகா போவி கார்ப்பரேஷன் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மரணம்; ஆடையைக் கலைந்த சி.ஐ.டி அதிகாரி
கர்நாடகா போவி மேம்பாட்டு நிறுவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். ஒரு பெண் குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) அதிகாரி விசாரணையின் போது தன்னைத் துன்புறுத்தியதாகவும், தனது ஆடைகளை அகற்றியதாகவும் அவர் இறப்பதற்கு முன் கடிதம் எழுதிவைத்துள்ளார்.ஆங்கிலத்தில் படிக்க: Accused in Karnataka Bhovi corporation scam found dead, death note accuses CID officer of stripping herஉயிரிழந்தவர் பெங்களூரு பத்மநாப நகரில் வசிக்கும் ஜீவா எஸ் (33) என்பது தெரியவந்தது. அவரது சகோதரி சங்கீத் எஸ் பெங்களூரு போலீசில் புகார் அளித்தார், அதில் சி.ஐ.டி போலீஸ் டி.எஸ்.பி கனகலட்சுமியை பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நவம்பர் 14-ம் தேதி சி.ஐ.டி விசாரணையில் ஜீவா கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. டி.எஸ்.பி தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், விசாரணையின் போது தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு, அவர் சயனைட் எடுத்துச் செல்கிறாரா என்று விசாரித்ததாகவும் அவர் 11 பக்க குறிப்பில் குற்றம் சாட்டினார். மேலும், டி.எஸ்.பி ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், ஜீவா சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.” என்று தெரிவித்தார்.எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த துன்புறுத்தல் நவம்பர் 14 முதல் நவம்பர் 21 வரை தொடர்ந்தது. ஜீவாவின் கடைக்கு டி.எஸ்.பி வந்து, அவர் இறப்பதற்கு சற்று முன்பு தன்னை பகிரங்கமாக அவமானப்படுத்தியதாகவும் சங்கீதா குற்றம் சாட்டினார்.பனசங்கரி போலீசார் கனகலட்சுமி மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7 (அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.2021-22 ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்த போவி கார்ப்பரேசன் மேம்பாட்டு நிறுவன ஊழல், போவி சமூக உறுப்பினர்களுக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கடனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாகப் பயன்படுத்தியது. சித்தாபுரா, தொட்டபல்லாபூர் மற்றும் கலகியில் இருந்து பல எஃப்.ஐ.ஆர்-கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் விசாரணைக்காக சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது.