Connect with us

இலங்கை

AI மூலம் நிர்வாண புகைப்படங்கள்; மாணவிகளுக்கு எச்சரிக்கை!

Published

on

Loading

AI மூலம் நிர்வாண புகைப்படங்கள்; மாணவிகளுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

எனவே மாணவிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு  கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

Advertisement

கடந்த சில நாட்களாக இந்த மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் காணப்படும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை  ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றி, உரிய மாணவிகளிடம் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக அவர்களை அச்சுறுத்தி பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த மோசடி கும்பலுக்கு அஞ்சி தங்களது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பலின் ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர். எனவே இச் சம்பங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் இதில் உயர்தர மாணவிகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே இவ்வாறான மோசடி கும்பலிடம் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்  என அவர் தெரிவித்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன