Connect with us

விளையாட்டு

இலங்கை நட்சத்திரங்களை விலைக்கு வாங்கிய ராஜஸ்தான் ரேயால்ஸ்!

Published

on

Loading

இலங்கை நட்சத்திரங்களை விலைக்கு வாங்கிய ராஜஸ்தான் ரேயால்ஸ்!

சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் மெகா ஏலத்தின் முதல் நாளில் இலங்கை நட்சத்திரங்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோரை ராஜஸ்தான் ரேயால்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் 2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையுடன் ஏலத்தில் நுழைந்தனர்.

Advertisement

ஏலத்தில் வனிந்து ஹசரங்கவை 5.25 கோடி இந்திய ரூபாவுக்கும், மஹீஷ் தீக்ஷன 4.40 கோடி இந்திய ரூபாவுக்கும் ராஜஸ்தான் ரேயால்ஸ் அணி வாங்கியுள்ளது.

இதன்படி, நேற்றைய ஏலத்தில் மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் மட்டுமே இலங்கை வீரர்கள் இடம்பெற்ற இதேவேளை, மீதமுள்ள வீரர்கள் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று ஏலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன