உலகம்
ஊடகச் செய்தியை மறுத்த கனடா அரசு

ஊடகச் செய்தியை மறுத்த கனடா அரசு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஊடகச் செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.
முன்னதாக, நிஜ்ஜாரை கொலை செய்ய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சதி திட்டம் தீட்டியதாக கூறி பெயர் வெளியிடாமல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும் அந்தச் செய்திகளில், “நிஜ்ஜார் கொலை சதி பற்றி இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்குத் தெரியும். என்றாலும், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் ஆதாரம் எதுவும் கனடா அரசிடம் இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.