இலங்கை
கரைச்சி பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான கலந்துரையாடல்!

கரைச்சி பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான கலந்துரையாடல்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழு மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை(06) கரைச்சி பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், கரைச்சி சுகாதார மருத்துவமனை அதிகாரி, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக்கிராம அலுவலர், முன்பள்ளி உதவிக்கல்வி அலுவலர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்,தொழில்துறை திணைக்கள அலுவலர், தனியார் கல்வி நிலைய இணைப்பாளர், கிராம அலுவலர்கள், பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் தொடர்பாக பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர். (ச)