இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி. யில் இன்றும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளி. யில் இன்றும் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று புதன்கிழமை(30) முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரை மணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (ச)