Connect with us

இலங்கை

பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

Published

on

Loading

பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை – சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறைக்கு நேற்று (19)  விஜயம் மேற்கொண்டனர்.

Advertisement

வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள சீன தூதுவர் நேற்று மதியம் 01.00 மணிக்கு பருத்தித்துறை – சக்கோட்டை முனைக்கு குழுவினரோடு வந்து சென்றுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சீன தூதுவர் இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

வடக்கிற்கு வரும் சந்தர்ப்பங்களில் பருத்தித்துறை – சக்கோட்டை முனைக்கு வந்து செல்லவதனை வழக்கமாக கொண்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

Advertisement

இந்த இடம் மிகவும் அழகான இடம் என்றும் மிகவும் விருப்பமான இடம் எனவும் கூறியதுடன் வடக்கு கிழக்கில் சீன அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்ததுடன் வடக்கு கிழக்கில் உள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறியளவிலான கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் என்பன பல கட்டங்களாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

இலங்கை வரலாற்றில் தெற்கை சேர்ந்த தலைவர் ஒருவர் வடக்கை வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும் என மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

Advertisement

இடதுசாரி பின்னணி கொண்ட அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்திருப்பது தொடர்பில் சீனா எப்படி பார்க்கிறது என கேள்வி எழுப்பிய போது, 

இலங்கை அரசு என்று அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை. யாராக இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவின் ஆதரவு தொடரும் என்றார்.

வட கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி என்றும் இருப்பினும் அரசியல் தீர்வு விடயத்தில் சீன அரசின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

Advertisement

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் என எல்லோரும் வேறுபாடுகளை கடந்து எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்கு சீனா ஒத்துழைப்புகளை வழங்கும் என்று பதிலளித்தவர் சக்கோட்டை முனையில் நிறுவப்பட்டிருக்கும் நல்லிணக்க நினைவுத்தூணில் பொறிக்கப்பட்டிருக்கும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையே இலங்கையின் பலம் (unity in diversity is the stength of srilanka) என்ற வாசகத்தை படித்துக்காட்டி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன