தொழில்நுட்பம்
மீண்டும் சூரிய ஆய்வுத் திட்டம்; ஐரோப்பா உடன் இணைந்து செயல்படுத்தும் இஸ்ரோ

மீண்டும் சூரிய ஆய்வுத் திட்டம்; ஐரோப்பா உடன் இணைந்து செயல்படுத்தும் இஸ்ரோ
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் உருவாக்கப்பட்ட 2 தனித்துவமான கருவிகளை சுமந்து டிசம்பர் 4ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. உலகில் முதல்முறையாக parallel satellite pair ஏவப்பட உள்ளது. சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற அடுக்கான சூரிய கரோனாவை ஆய்வு செய்ய2 செயற்கைக் கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகில் முதன்முதலாக, ப்ரோபா-3 மிஷனில் இரண்டு செயற்கைக் கோள்களை ஒன்றுக் கொன்று இணையாக நீண்ட காலத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் கருவிகள் – இந்தியாவின் ஆதித்யா எல்1 மிஷனில் உள்ளது போன்று ஆகும். சூரியனைப் பார்க்க ஒரு கரோனாகிராஃப் மற்றும் சூரியனின் பிரகாசமான ஒளியைத் தடுக்க ஒரு மறைபொருளைக் கொண்டுள்ளது.இந்த திட்டத்தில் ஒரே செயற்கைக்கோளில் இரண்டு கருவிகளை கொண்டிருப்பதற்குப் பதிலாக, இதில் ஒரு செயற்கைக்கோளில் கரோனாகிராஃப்-ம் மற்றொன்றில் occulter-ம் உள்ளது. செயற்கைக்கோள்கள் parallel வடிவில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பயணிக்கும். சுமார் 150 மீ தொலைவில் இணையான அமைப்பில் பறக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 600 x 60530 கி.மீ உயரமான நீள்வட்ட சுற்றுப் பாதையில் ஒன்றாக அடுக்கப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தப்படும். பின்னர், செயற்கைக் கோள்கள் இணையான ( parallel) சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.