இலங்கை
வசாவிழான் பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி!

வசாவிழான் பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி!
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சிபெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது.
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
வசாவிழான் பாதையினை திறப்பதற்கு நீண்ட காலமாக முயற்சிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அப்பாதை திறப்பதற்கு பல்வேறு வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும் அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களிடமும் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் வீதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டதாகவும் இதனை அடுத்து தற்பொழுது வசாவிழான் பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அத்தோடு ஜனாதிபதிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். (ப)