Connect with us

உலகம்

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

Published

on

Loading

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4,700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோள், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம், அமெரிக்காவில் உள்ள கேப் கேனவர் ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி நள்ளிரவு 12.00 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Advertisement

விண்ணில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைகோள், பின்னர் திட்டமிட்டபடி புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இஸ்ரோவிற்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக் கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Also Read:
எலான் மஸ்கின் ஸ்டார்ஷிப் திட்டம்… இனி 40 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா பயணம்?

அதிவேக இணைய சேவைகள் கிடைக்கும்!

Advertisement

இந்த செயற்கைக்கோள் மூலம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிவேக இணைய சேவைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்த ரீதியாக விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜிசாட் N2 செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 14 ஆண்டுகள் ஆகும். இஸ்ரோவின் ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 4,100 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை மட்டும் விண்ணில் செலுத்த முடியும் என்பதால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் ஜிசாட் N2 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன