Connect with us

இலங்கை

உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்!

Published

on

Loading

உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்!

முல்லைத்தீவில்  தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான கலந்துரையாடல்
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் பணிபுரியவுள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் தெளிவூட்டல் கலந்துரையாடல் நடைபெற்ற கலந்துரையாடலானது  முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்  தலைமையில் மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (29) நடைபெற்றது. 

நாளைய தினம் (30) மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும்  மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 

Advertisement

வன்னி தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் 3947 பேர் இம்முறை தபாமூல வாக்களிப்புக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இன்றைய இந்தக் கலந்துரையாடலில் தபால் மூல வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்றவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக  உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. பீ.ரகுநாதன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  (ப)
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன