இலங்கை
பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு!

பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு!
முல்லைத்தீவில் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு!!
நாளைய தினம் (21) இடம்பெறவுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று(20) காலை பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை (21) காலை 7 மணிமுதல் 4 மணிவரை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று (20) காலை 7 மணிமுதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டுவரும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களிற்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.
இதேவேளை முல்லைத்தீவில் 89,889 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக பொலிஸார் உட்பட 2000 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ப)