Connect with us

இலங்கை

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம்!

Published

on

Loading

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்துவிநாயகபுரத்தில் சுவரொட்டி ஒட்டும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இந்த சம்பவம்  நேற்று  இரவு இடம்பெற்றுள்ளது.    

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   

Advertisement

முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்ணிக்கு ஆதரவாக சுவரொட்டி  ஒட்ட முற்பட்டவர் காணி வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.    

இந்த மின்சார வேலி காணி உரிமையாளரால்  யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக  பொருத்தப்பட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளார்.  முத்துவிநாயகபுரம் முத்தையன்கட்டு ஒட்டுசுட்டானை சேர்ந்த 45 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.  

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒட்டுசுடுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.  

Advertisement

குறித்த காணியின் உரிமையாளர் அனுமதிபெற்று  மின்சார வேலி  அமைத்தாரா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன