Connect with us

இலங்கை

முல்லையில் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த பாடசாலை அதிபர் கைது

Published

on

Loading

முல்லையில் வாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்த பாடசாலை அதிபர் கைது

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை  ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் கடந்த 04,05.06 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது

Advertisement

இவ்வாறு  நேற்று முன்தினம் (06) முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் வாக்களிக்கத் தயார் செய்யப்பட்ட ஆறு வாக்கெடுப்பு நிலையங்களில் முதலாவது வாக்கெடுப்பு நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த  புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் அதிபர் தனது வாக்கை அளிப்பதற்காக  வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் தனது  கைத்தொலைபேசி மூலம் ஒளிப்படம் எடுத்துள்ளார்.

இதனை அவதானித்த  தேர்தல் கடமையில் இருந்த குறித்த நிலையத்துக்கு பொறுப்பான ARO  மேற்படி விடயமாக முல்லைத்தீவு  தேர்தல்கள் அலுவலகத்துக்கு  தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வந்த தேர்தல் திணைக்கள அதிகாரிகள் குறித்த அதிபரின் தொலைபேசியை பெற்றுக்கொண்டதோடு  மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு நேற்று இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாரிடம் தெரியப்படுத்தினர்.

இந்நிலையிலேயே குறித்த அதிபர் நேற்றையதினம்  முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

குறித்த அதிபர் தனது வாக்கை சங்குச்சின்னத்துக்கும் இரண்டாவது விருப்பு வாக்கை தொலைபேசிக்கும் அளித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன