Connect with us

உலகம்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்!

Published

on

Loading

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல்!

உப ஜனாதிபதியிடம் விசாரணை

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஜூனியர் ஃபெர்டினண்ட் மார்கோஸுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை நடத்த, உப ஜனாதிபதி சாரா டுடேர்த்தேவுக்கு அந்நாட்டு புலனாய்வு பிரிவு நேரில் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான ஃபெர்டினண்ட் மார்கோஸின் மகனான ஜூனியர் மார்கோஸ் போட்டியிட்டார். அவருடன் கூட்டணி அமைத்து, அப்போதைய ஜனாதிபதியும், போதை மருந்துக்கு எதிரான போர் என்ற பேரில் ஏராளமானவர்களை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் ரோட்ரிகோ டுடேர்த்தேவின் மகள் சாரா டுடேர்த்தே உப ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிட்டார். அந்தத் தோ்தலில் மார்கோஸ் – டுடேர்த்தே கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இருந்தாலும், அண்மைக் காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக, உப ஜனாதிபதி பதவி தவிர்த்து மற்ற அரசுப் பொறுப்புகளில் இருந்து சாரா டுடேர்த்தே விலகினார். மேலும், மார்கோஸ் அரசு மீது அவரும், அவா் மீது மார்கோஸும் மாறி மாறி முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். இந்நிலையில், செய்தியாளா்களிடையே உரையாற்றிய சாரா டுடேர்த்தே, ஜனாதிபதி ஃபொ்டினண்ட் மார்கோஸ் ஜூனியரை படுகொலை செய்வதற்காக தனது பாதுகாப்பு வட்டாரத்திலிருந்தே ஒருவரை தயார்படுத்தி வைத்திருப்பதாகக் கூறினார். ஒருவேளை தன்னை யாராவது கொன்றால் ஜனாதிபதியைக் கொன்றுவிடும்படி அந்நபரிடம் கூறியுள்ளதாகவும், இது வேடிக்கை தகவல் இல்லை என்றும் சாரா டுடேர்த்தே எச்சரித்தார்.

இந்த வெளிப்படையான கொலை மிரட்டல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் குறித்து பிலிப்பைன்ஸ் தேசிய காவல் துறையும் இராணுவமும் கவலை தெரிவித்தன. அதையடுத்து, ஜனாதிபதிக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன