இலங்கை
வடிகானில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழப்பு!

வடிகானில் தவறி விழுந்த ஒருவர் உயிரிழப்பு!
மாவத்தகம கொஸ்வத்தையில் வனிகானில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள கைத்தொழில் வலயத்தில் நீர் நிரம்பிய வடிகானில் தவறி விழுந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடபுஸ்ஸல்லாவ மடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொஸ்வத்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.