இந்தியா
கேரளாவில் செயல்பட்டு வரும் டிஜிற்றல் நீதிமன்றம்!

கேரளாவில் செயல்பட்டு வரும் டிஜிற்றல் நீதிமன்றம்!
கேரள மாநிலத்தின் கொல்லத்தில் முழுமையான டிஜிற்றல் நீதிமன்றம் நேற்று முதல் செயல்பட்டுவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் முதல் முழுமையான டிஜிற்றல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரள ஐகோர்ட்டில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி திறந்து வைத்த நிலையில் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம் எனவும் பிணை பெற கட்சிக்காரர்கள் மற்றும் ஜாமின்தாரர்கள் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகத் தேவையில்லை எனவும் அவர்கள் ஜாமின் பெறுவதற்கான ஆவணங்களை ஒன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ப)