இந்தியா
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து!

ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து!
ஜார்கண்ட் மாநிலம் , ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
கோர்ஹர் பொலிஸ் நிலையத்திற்கு அருகே வலைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக குறித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த பேருந்தில் 50 பயணிகள் .இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.