Connect with us

உலகம்

தென் கொரிய எல்லையில் அமானுஷ்ய சத்தங்களை ஒலிக்கவிடும் வட கொரியா!

Published

on

Loading

தென் கொரிய எல்லையில் அமானுஷ்ய சத்தங்களை ஒலிக்கவிடும் வட கொரியா!

தென் கொரியாவுடன் பகைமை பாராட்டி வரும் வட கொரியா அணு ஆயுத மிரட்டல், ஏவுகணை சோதனை என உலக நாடுகளை பதற்றத்திலேயே வைத்துள்ளது. சமீப காலமாக ரஷ்யாவுடன் ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம், உக்ரைன் போருக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது என வட கொரியா தனது இருப்பை வெளிப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் தென் கொரியாவை அதிகாரப்பூர்வமாக எதிரி நாடாக அறிவித்து அதனுடன் இருந்த அனைத்து எல்லை தொடர்பு சாலைகளைத் துண்டித்து அழித்தது. தென் கொரியாவுக்குள் தங்கள் நாட்டின் குப்பைகள் நிரம்பிய பலூன்களை அனுப்புவது என தொல்லை கொடுத்த வந்த வட கொரியா தற்போது தென் கொரியாவை சீண்ட நூதன வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது.

Advertisement

அதாவது, எல்லைப் பகுதியில் அதிக ஒலிகளை எழுப்பும் ஸ்பீக்கர்களை நிறுவி 24 மணி நேரமும், எல்லைக்கு அந்த புறம் இருக்கும் தென் கொரிய கிராமங்களில் உள்ள மக்களைப் பாடாய் படுத்தி வருகிறது. அமானுஷ்யமான, வினோத ஒலிகளை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்வதால் அம்மக்களின் அன்றாட வாழ்வு சீர்குலைந்துள்ளது.

குறிப்பாக எல்லையில் தென் கொரியாவுக்குள் உள்ள டாங்கன் என்ற கிராமம் இதனால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. கார் விபத்துகள் ஏற்படுவது போன்ற சத்தம், பேய் அலறுவது, உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது, ஓநாய்கள் ஊளையிடுதல், பீரங்கித் தாக்குதல் சத்தம் என தொடர்ச்சியாக வினோதமான சத்தங்களை வட கொரியா ஸ்பீக்கர்கள் ஒலிப்பரப்பி வருகிறது.

குண்டு ஒன்று தான் வீசவில்லை என்றாலும் அதற்க்கு ஈடாக இந்த சத்தங்கள் தங்களை பைத்தியமாக்குவதாகவும் இரவில் தூக்கமில்லை என்றும் அந்த கிராம மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

Advertisement

கடந்த ஜூலை மாதம் முதல் 24 மணி நேரமும் இடைவிடாமல் இதுபோன்ற சத்தம் வந்துகொண்டிருப்பதாக அவர்கள் புலம்பித தவிக்கின்றனர். இந்த சத்தங்கள் [ NOISE BOMBING] தென் கொரியா மீதான வடகொரியாவின் உளவியல் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன