Connect with us

உலகம்

‘பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான்’ – ஐ.நா அதிர்ச்சி தகவல்!

Published

on

Loading

‘பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான்’ – ஐ.நா அதிர்ச்சி தகவல்!


நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 27/11/2024 | Edited on 28/11/2024

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தான இடம் வீடு என்றும், நாள் ஒன்றுக்கு 140 பெண்கள் அவர்களது வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொல்லப்படுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா தெரிவித்துள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நேற்று முன் தினம் (25-11-24) கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது, பெரும்பாலான நாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஐ.நா பெண்கள் மற்றும் போதைப்பொருள், குற்றச் செயல்கள் தடுப்பு அமைப்பான யுஎன்டிஓசி (UNODC) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘2023ல் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமிக்கு கொல்லப்பட்டிருக்கின்றனர். உலகளவில், கடந்த 2023ஆம் ஆண்டு 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். அதில் 60% அதாவது 51,100 பேர் அவர்களின் வாழ்க்கை துணை அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 

Advertisement

ஆப்பிரிக்காவில் 21,700 பெண்கள் அல்லது சிறுமிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களால் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் 18,500 பேர், அமெரிக்காவில் 8,300 பேர், ஐரோப்பாவில் 2,300 பேர், மற்றும் ஓசியானியாவில் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், கொல்லப்படும் பெரும்பாலான பெண்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படுகின்றனர். கடந்தாண்டு நடந்த இந்த படுகொலைகளில், ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 1 லட்சம் பெண்களில் 2.9 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100,000 பேருக்கு 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்காவில் 1,00,000க்கு 1.6 பெண்களும், ஓசியானியாவில் 1,00,000க்கு 1.5 பெண்களும், ஆசியாவில் 1,00,000 பெண்களில் 0.8 பெண்கள் மற்றும் ஐரோப்பாவில் 1,00,000 பெண்களில் 0.6 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆண்களும் சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் என்றாலும், பெண்களும் சிறுமிகளும் தனிப்பட்ட கொடிய வன்முறையால் விகிதாச்சாரத்தில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 2023இல் படுகொலை செய்யப்பட்டவர்களில் 80% பேர் ஆண்கள், 20% பேர் பெண்கள். ஆனால் குடும்பத்திற்குள் நடக்கும் கொடூரமான வன்முறைகளால் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 2023 இல் இணையர்களாலும் குடும்ப உறுப்பினர்களாலும் வேண்டுமென்றே கிட்டத்தட்ட 60% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் 48,000 பெண்கள் மற்றும் சிறுமிகள், தங்களது இணையர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருந்தனர் என்று பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில், இதை ஒப்பிட்டு பார்த்தால் 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அதிகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. 

  • “எல்லாருமே பார்ப்பீங்க” – விவரிக்கும் ‘கூச முனுசாமி வீரப்பன்’
  • “அதான் அடிச்சு தூக்குனேன்” – கூலாக சொன்ன கூச முனுசாமி வீரப்பன்

கடக்கும் முன் கவனிங்க…

கடக்கும் முன் கவனிங்க…

  • மின்சாரம் தாக்கி வட மாநில இளைஞர் பலி; போலீசார் விசாரணை!

  • அடிமடியிலேயே கைவைக்கும் சிவசேனா; ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் பா.ஜ.க!

  • ‘தமிழ் சொல்லித்தந்தது மனிதத்தை…’ – ஆட்டோவிற்கு உதவிக் கரம் நீட்டிய அரசு பேருந்து!

  • ‘புயல் கரையை கடப்பது எப்போது?’ – புது அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

  • அடாது மழையிலும் விடாது பணி… – களத்தில் நிற்கும் தூய்மை பணியாளர்கள்!

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன