Connect with us

இந்தியா

10 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

Published

on

Loading

10 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுக்மா மாவட்டத்தின் கோன்டா மற்றும் கிஸ்தாராம் பகுதி நக்சல்கள் கொராஜூகுடா, தண்டீஸ்புரம், நகரம், பந்தர்பாதர் ஆகிய கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாவட்ட தனிப் படை (டி.ஆர்.சி.), சிறப்பு அதிரடிப்படை, பஸ்தர் பாதுகாப்புப் படை அடங்கிய கூட்டுப் படையினர் அங்கு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 நக்சல்கள் சுட்டுக்கொல்ப்பட்டதாக பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று காலை முதல் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 10 நக்சல்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன