Connect with us

இந்தியா

17,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய இந்தியா!

Published

on

Loading

17,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய இந்தியா!

ஆன்லைன் நிதி மோசடிகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்திய உள்துறை அமைச்சு 17,000க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது.

இந்த கணக்குகளில் பெரும்பாலானவை கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டன, அங்கு அவை இணைய மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்திய உள்துறை அமைச்சின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஆன்லைன் தளங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியக் குடிமக்களை கம்போடியாவுக்குக் கவர்ந்திழுக்கும் மனித கடத்தல்காரர்கள், ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களைச் செய்யத் ஊக்குவிக்கப்படுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் இருந்தால் சைபர் துரித பிரிவுக்கு தெரிவிக்குமாறு வலியுறுத்தினார்.

Advertisement

ஆன்லைன் மோசடிகள் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் 6 கோடி இந்திய ரூபாய் மோசடி இடம்பெறுவதாக உள்துறை அமைச்சின் சைபர் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டு தொடக்கம் ஒக்டோபர் வரை, ஆன்லைன் மோசடிகள் தொடர்பில் 92,334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன