Connect with us

இந்தியா

ஃபெஞ்சல் புயல்… வானில் வட்டமடித்த விமானங்கள்!

Published

on

Loading

ஃபெஞ்சல் புயல்… வானில் வட்டமடித்த விமானங்கள்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று (நவம்பர் 29) இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, மைசூரு, புவனேஸ்வர், கவுகாத்தி, புனே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 13 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இன்று காலை புனே, மஸ்கட், குவைத், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தரையிறக்க முடியாமல் வானில் வட்டமடித்தன. வானிலை சீரானதும் அந்த விமானங்கள் சென்னை விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன