விளையாட்டு
“இளம் வீரர்களை உருவாக்கும் பாரம்பரியத்தை தொடர விருப்பம்” – MI புதிய முகங்களுக்கு நீடா அம்பானி வாழ்த்து!

“இளம் வீரர்களை உருவாக்கும் பாரம்பரியத்தை தொடர விருப்பம்” – MI புதிய முகங்களுக்கு நீடா அம்பானி வாழ்த்து!
இரண்டு தினங்களாக ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பல இளம் வீரர்களை வாங்கியது. இதுதொடர்பாக பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி, “மெகா ஏலம் என்றால் புதிய அணி, புதிய தொடக்கம். ஆனால் அதுவே மும்பை இந்தியன்ஸ்க்கு உற்சாகம்.
டிரென்ட் போல்ட், நமன் திர், அல்லா கசன்ஃபர், ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், ராபின் மின்ஸ், கரண் சர்மா, வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, அஸ்வினி குமார், ராஜ் அங்கத் பாவா, ஸ்ரீஜித் கிருஷ்ணன், சத்தியநாராயண ராஜு, ஜான் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர் என சில புதிய முகங்களையும், அதேநேரம் சில பழைய வீரர்களையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஹர்திக், ஜஸ்பிரித், ரோஹித், சூர்யா மற்றும் திலக் என வலுவான வீரர்களை ஏற்கனவே ரீடெயின் செய்துள்ளோம். இவர்களை சுற்றி எப்படி ஒரு அணியை கட்டமைப்பு என்பதே ஏலத்தில் எங்களுக்கு இருந்த வாய்ப்பு.
இந்திய அணிக்காக விளையாடும் பல திறமையான இளைஞர்களை வளர்த்தெடுப்பதில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறோம். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ரமன்தீப் சிங் ஆகியோரை போல, இப்போது அணியில் இணைந்துள்ள நமன் திர், ராபின் மின்ஸ், அஸ்வினி குமார், ராஜ் அங்கத் பாவா மற்றும் ஸ்ரீஜித் கிருஷ்ணன் ஆகிய இளம் வீரர்களுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
Mumbai Indians owner Mrs Nita Ambani says the franchise wants to continue the tradition of developing young players for Indian cricket
Credit: @mipaltan pic.twitter.com/WFR7aPr2oH
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக இளம் வீரர்களை உருவாக்கும் இந்த பாரம்பரியத்தை நாங்கள் தொடர விரும்புகிறோம்.
மும்பை பல்தான்ஸ்.. இது எங்கள் அணி, மும்பையின் அணி. உங்களின் ஆதரவுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய பலம். ஒரு குடும்பமாக விளையாடி ஒன்றாக நாம் வெற்றிபெறுவோம்” என்று நெகிழ்ச்சியுடன் புதிய வீரர்களை அணிக்கு வரவேற்றுள்ளார்.