உலகம்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்
ஹமாஸ் அமைப்பின் தலைவா் மற்றும் ஹிஸ்புல்லாக்களின் மூத்த தளபதி கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினா்.
இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா். அவா்களின் தாக்குதல் சமீப காலமாக தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகா் உயிரிழந்தாா். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால், அவரை இஸ்ரேல்தான் கொன்றது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானும், அதன் நட்பு நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சரமாரி ராக்கெட் வீச்சு: இந்நிலையில், வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்ள சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவியதாக ஹிஸ்புல்லாக்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். அண்மையில் லெபனானின் இரு நகா்ப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதாகவும், இஸ்ரேலின் தாக்குதல்களில் லெபனான் மக்கள் உயிரிழந்ததாலும், அதற்குப் பதிலடி அளிக்கும் விதமாக ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்தனா்.
இந்த ராக்கெட்டுகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக தகவல்கள் வெளியாகின.
‘பல்முனைப் போா்ச் சூழலில் இஸ்ரேல்’: இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், ‘தற்போது பன்முனைப் போா்ச் சூழலில் இஸ்ரேல் உள்ளது. எந்தவொரு தாக்குதல் சூழலையும் எதிா்கொள்ள இஸ்ரேல் தயாராக உள்ளது’ என்றாா்.
இதனிடையே காஸா மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் 3 சிறாா்கள், ஒரு மூதாட்டி உள்பட 18 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
டெல் அவிவில் பாலஸ்தீனா் தாக்குதல்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் கூா்மையான ஆயுதத்தால் ஒருவா் மேற்கொண்ட தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, 80 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.
அந்நாட்டு காவல் துறையினா் துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதல் நடத்திய நபா் உயிரிழந்தாா். அவா் பாலஸ்தீன தீவிரவாதி என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
ஜோா்டான்-ஈரான் அமைச்சா்கள் சந்திப்பு: இஸ்லாமிய நாடான ஈரானும், அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் மத்திய கிழக்கு பிராந்திய போராக உருவெடுக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அபாயத்தை தடுக்கும் நோக்கில், ஜோா்டான் வெளியுறவு அமைச்சா் அய்மன் சஃபாடி ஞாயிற்றுக்கிழமை ஈரான் சென்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் (பொறுப்பு) அலி பகேரியை சந்தித்துப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா்.
சிரியாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி அளிக்கும் வகையில், கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டை நோக்கி ஏராளமான ட்ரோன்களை (ஆளில்லா விமானங்களை) ஈரான் ஏவியது. அவற்றை இடைமறித்து அழிக்க மேற்கத்திய நாடுகளின் நெருக்கமான கூட்டாளியாக உள்ள ஜோா்டான் உதவியது.
இந்நிலையில், ஈரானுக்கு அய்மன் சஃபாடி பயணம் மேற்கொண்டாா். கடந்த 20 ஆண்டுகளில் ஈரானுக்கு ஜோா்டான் அமைச்சா் ஒருவா் சென்றது இதுவே முதல்முறை. [எ]