உலகம்
ஐரோப்பா எல்லையில் யாழ். இளைஞன் சடலமாக மீட்பு!

ஐரோப்பா எல்லையில் யாழ். இளைஞன் சடலமாக மீட்பு!
ஐரோப்பாவின் எல்லையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோப்பாயைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் ஒரு வருடத்திற்கு முன் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி மேற்கொண்டு வந்துள்ளதாவும் சிறு வயது முதல் தந்தையை இழந்த நிலையில் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பிய நாட்டுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் நேற்று முன்தினம் எட்டு பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா-ரஷ்ய எல்லையை கடக்க முயற்ச்சி செய்த நிலையில் குறித்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.
இம்மரணம் கொலையா? இயற்கை மரணமா? என்ற சந்தேகத்தில் விசாரணைகள் முன்னெடுகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)