Connect with us

உலகம்

துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்

Published

on

Loading

துருக்கியில் பயங்கரவாத தாக்குதல்

துருக்கிய விமான சேவை நிறுவனமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் அன்காராவை அண்மித்துள்ள விமான சேவை நிறுவனத்தின் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

Advertisement

தாக்குதலை நடத்த வந்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக துருக்கி உட்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். அந்நாட்டிலுள்ள குர்தி கிளர்ச்சிக் குழுவான PKK தாக்குதலை நடத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை. சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் நால்வர் குறித்த விமான சேவை ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன