உலகம்
படகொன்றிலிருந்து சிதைவடைந்த நிலையில் 30 சடலங்கள் மீட்பு

படகொன்றிலிருந்து சிதைவடைந்த நிலையில் 30 சடலங்கள் மீட்பு
செனெகலின் கரையோரத்தில் படகொன்றிலிருந்து 30 சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தலைநகர் டக்கரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் படகொன்று தத்தளிப்பதாக கிடைக்கப்பட்ட தகவலுக்கு செனெகல் கடற்படை மரப்படகினை கரைக்கு கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உடல்கள் மிக மோசமாக சிதைவடைந்து காணப்படுவதால் அடையாளம் காணும் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக செனெகல் கடற்படை தெரிவித்துள்ளது.
செனெகலில் இருந்து ஸ்பெயினின் கனரி தீவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலே இந்த சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
சிதைவடைந்துள்ள உடல்களின் நிலையை பார்க்கும்போது குடியேற்றவாசிகள் பல நாட்களாக அட்லண்டிக் சமுத்திரத்தில் மிதந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட இப் படகு எப்போது எங்கிருந்து புறப்பட்டது என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஞ)