Connect with us

உலகம்

பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 60 பேர் பலி!

Published

on

Loading

பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 60 பேர் பலி!

 

காஸாவில் உள்ள பள்ளி முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

கிழக்கு காஸாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்கதல் நடத்தியதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகின்றது. காஸாவின் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில் உள்ள பள்ளிகளில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமிட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. வான்வழித் தாக்குதலில் 50 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு வருகின்றது.

Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் உள்ள 564 பள்ளிகளில் 477 பள்ளிகள் நேரடி தாக்குதலுக்குப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

காஸாவின் போருக்கு முன்னர் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் தற்போது 1.9 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து விரட்டப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதல்களிலிருந்து தப்பிக்க மக்கள் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலானோர் காஸா கடற்கரையில் கூடார முகாம்களில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. [எ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன