உலகம்
பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு ஈரான் அவசர அழைப்பு!

பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு ஈரான் அவசர அழைப்பு!
ஈரான் மீது இஸ்ரேல் கடந்த சனியன்று முன்னெடுத்த தாக்குதலைக் கண்டித்துள்ள ஈரான், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸுக்கு அவரக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இத்தகைய கூட்டம் ஈரானுக்கும் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கும் இத்தாக்குதலைக் கண்டிப்பதற்கும் தங்கள் நிலைகளை வலியுறுத்துவதற்கும் நல்ல வாய்ப்பாக அமையும் என ஈரானின் உயர் இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகையில், ‘அமெரிக்கா அதன் அனைத்து திறன்களுடனும் இஸ்ரேலின் பின்னால் நிற்கிறது. சியோனிச ஆட்சியின் குற்றங்களில் ஒரு பங்காளியாக உள்ளது. சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் அமெரிக்காவின் பங்கேற்பு தெளிவானது’ என்றுள்ளார்.