இலங்கை
வடக்கு- கிழக்கில் பணியாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!

வடக்கு- கிழக்கில் பணியாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்!
வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் மருத்துவமனைப் பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, மருத்துவர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு மருத்துவமனையின் பணிப்பாளராகவும், மருத்துவர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், மருத்துவர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், மருத்துவர் திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், மருத்துவர் என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது மருத்துவமனைப் பணிப்பாளராகவும், மருத்துவர் டபிள்யூ.ஏ.நி.நிஷங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், மருத்துவர் எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொதுமருத்துவமனையின் பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொதுமருத்துவமனையின் பணிப்பாளராகவும், டி.எம்.ஏ.கே.திஸாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிறேமதாஸ முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2ஆம் திகதிக்குப் பின்னர் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)