இந்தியா
Fengal Cyclone: 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் – புயல் காரணமாக தமிழக அரசு அறிவிப்பு!

Fengal Cyclone: 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் – புயல் காரணமாக தமிழக அரசு அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட சில இடங்களில் காலை முதலே கனமழை பெய்துவருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மேலும் தற்போது ஃபெஞ்சல் புயல் 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் புயல் கரையை கடக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புயல் காரணமாக இந்த மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அபராதத் தொகை இல்லாமல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.