Connect with us

இலங்கை

அர்ஜுன அலோசியஸ் மீது புதிய வழக்கு!

Published

on

Loading

அர்ஜுன அலோசியஸ் மீது புதிய வழக்கு!

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் 6 மாத சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் டபிள்யூ.எம்.மென்டிஸ் அண்ட் கம்பெனியின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ், செய்தித்தாள் அச்சிடுவதற்கு காகிதத்தை வாங்கி 12 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான காகிதத்தை இறக்குமதி செய்து விநியோகம் செய்து வரும் நெப்டியூன் பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் தாக்கல் செய்த இந்த வழக்கில் அர்ஜுன அலோசியஸ் மற்றும் சமிந்த சஹான் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவல முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  

அர்ஜுன அலோசியஸ் சிறைச்சாலை அதிகார சபையினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது பிரதிவாதி நீதிமன்றில் ஆஜராகவில்லை.  

சட்டத்தரணி தர்மதிலக்க கமகேவின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி பாத்திமா சுஹாரியா, மனுதாரர் சார்பில் நீதிமன்றில் சாட்சியங்களை முன்வைத்தார்.  

Advertisement

இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான், பிரதிவாதிக்கு தலா 500,000 ரூபா வீதம் 8 சரீரப் பிணைகளை வழங்கினார்.

தமது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டில் தனித்தனி சந்தர்ப்பங்களில் நான்கு காசோலைகளை வழங்கியதன் மூலம் 12 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளதால் மோசடி மற்றும் குற்றவியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கை ஆய்வு செய்வதற்கும் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் நியாயமான கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிக்கு பிணை வழங்குமாறு கோரினார்.  

Advertisement

மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாத இரண்டாவது பிரதிவாதியை மார்ச் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன