Connect with us

இந்தியா

இரண்டரை வயது மகளை மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்… பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்

Published

on

இரண்டரை வயது மகளை மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்…  பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்

Loading

இரண்டரை வயது மகளை மாடியிலிருந்து வீசி கொலை செய்த தாய்… பின்னணியில் அதிர்ச்சி தரும் தகவல்

தனது இரண்டரை வயது மகளை தாய் ஒருவர் மாடியிலிருந்து கீழே வீசி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  கடந்த 21 ஆம் தேதி இந்த கொலை நடந்தாலும், அதற்கு 5 நாட்களுக்கு பின்னர்தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதற்கு முன்பாக குழந்தை தவறிதான் கீழே விழுந்து விட்டது என்று அவரது தந்தை முர்ஷித் நினைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் சிசிடிவி காட்சிகளை அவர் பார்த்தபோதுதான் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நட்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் கடந்த 26 ஆம் தேதி சிசிடிவி காட்சிகளை பார்த்திருக்கிறார். இதைத் தொடர்ந்து போலீசாரிடம் அவர் அளித்த புகாரின்பேரில் அவரது மனைவி அனம் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின்போது அனம் இன்னொரு ஆணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளதும் அதற்கு அவரது குழந்தை இடையூறாக இருந்ததும் தெரிய வந்தது. இரண்டரை வயது குழந்தை அடக்கம் செய்யப்பட்டபோதிலும், அவரது தாய் கைதானதிற்கு பின்னர், சடலத்தை முறையான அனுமதி பெற்று தோண்டி எடுப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

Advertisement

29 வயதாகும் முர்ஷித்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வீட்டில் சண்டை நடந்துள்ளது. மனைவி போனில் இன்னொரு நபருடன் பேசியபோது அதனை முர்ஷித கண்டித்துள்ளார். மேலும், வீட்டிற்கு வரும் நபர்கள் குறித்து இரண்டரை வயது குழந்தை அவரது தந்தையிடம் பலமுறை கூறியுள்ளது. இதன் அடிப்படையில் பெற்ற மகளை அனம் கொலை செய்திருப்பதாக நம்பப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன