இலங்கை
கடற் பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை!

கடற் பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் ஆழமற்ற மற்றும் ஆழமான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் அலைகளின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.