Connect with us

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான புலம்பெயர் இலங்கையர் தமிழர்!

Published

on

Loading

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான புலம்பெயர் இலங்கையர் தமிழர்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைதான சந்தேக நபர் சேகரிக்கப்பட்ட நிதி கொழும்பு மற்றும் வன்னி பகுதியில் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டு பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

கொழும்பு – வடக்கு குற்றப் பிரிவினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட பயணத்தடை உத்தரவுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன