இலங்கை
குளத்தில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு!

குளத்தில் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு!
வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட சென்ற போது கால் தவறி குளத்திற்குள் குறித்த இளைஞன் விழுந்துள்ளார்.
இதனையடுத்து ஊர் மக்கள் குறித்த இளைஞனை தேடியதுடன் மாமடு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.
எனினும் மூன்றுநாட்களாக இளைஞன் கண்டுபிடிக்கபபடாத நிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று காலை குறித்த குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிரந்தஹசன் குணவர்த்தன என்ற இளைஞன் ஆவார். (ச)