இலங்கை
சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படிஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை ரூபா 02 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.
லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும்.
மற்ற எரிபொருள் விலைகள் திருத்தப்படவில்லை மற்றும் அந்த விலைகள் முந்தைய விலையில் விற்கப்படும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு நிகராக சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை திருத்தியுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை ரூபா 02 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 309 ரூபாவாகும்.
லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும்.
மற்ற எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படவில்லை மற்றும் அந்த விலைகள் முந்தைய விலையில் விற்கப்படும்.