இலங்கை
திரும்பத் திரும்ப மன்னார் மருத்துவமனை கொலைக்களமாக மாறி வருகிறது,

திரும்பத் திரும்ப மன்னார் மருத்துவமனை கொலைக்களமாக மாறி வருகிறது,
மன்னார் மருத்தவமனை வளங்கள் மற்றும் குறைபாடுகள் ஆராயப்பட்டு ஒரு ஒழுங்கமைப்பான மருத்துவமனையாக மாற்றுவதற்கு விரும்புகின்றேன்.
ஆனால் பொது அமைப்புகளின் கட்டமைப்பு தலைவர் எனப்படுபவரும் மற்றும் சில குழப்பவாதிகளும் எப்போதுமே மன்னார் மருத்துவமனைகளில் நடக்கின்ற அட்டூழியங்களை மறைக்க கூடிய வகையில் தினமும் செயல்படுகிறார்கள்.
வவுனியா மருத்துவமனையிலும் இதே மாதிரி ஒரு சிசுக்கொலை நடந்தது. அப்போது கூட நான் அங்கே செல்லாமல் விட்டிருந்தேன். இறுதியாக அவை கூட மக்கள் மறக்கும் அளவுக்கு போயிருக்கிறது.
அப்போது கூட கீழே படத்தில் இருக்கும் நபர் அங்கே சென்று மக்களை குழப்பியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
இவ்வாறானவர்களை மக்களாகவே ஒதுக்காத பட்சத்தில் நாம் எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் நீற்று போக கூடும்.
தயவுசெய்து பிழையானவர்களை இனம் கண்டு ஒதுக்கிக் கொள்ளவும்.
என நாடாளுமன்ற உறுப்பினர்- இராமநாதன் அர்ச்சுனா தெரிவத்தார். (ப)