Connect with us

தொழில்நுட்பம்

திரு. நாதன் கந்தையாவின் – நாங்கள் சேர்ப்பில்லை. கவிதை

Published

on

Loading

திரு. நாதன் கந்தையாவின் – நாங்கள் சேர்ப்பில்லை. கவிதை

நாங்கள் சேர்ப்பில்லை.
 ****************************

விண்முட்ட விஞ்ஞானம்

Advertisement

வினைத்திறனாய் ஆராய்ச்சி

செவ்வாயில் குடியமர

சிறப்பான திட்டமிடல்

Advertisement

கல்லுக்குள் இருக்கும்

கனிமத்தை அகழ்ந்தாய்ந்து

பொன்னாய் திரவியமாய்

Advertisement

பொதுவாக்க பெரும் திட்டம்.

 

புல்லுக்கு வயதென்ன

Advertisement

பூண்டுக்கும் உணர்வுண்டோ

நத்தைக்கும் எறும்புக்கும்

சித்தங்கலங்காமல் 

Advertisement

மெத்தப்படித்த பலர்

சுற்றி நின்று நடைப்பயிற்சி

குளிர் நடுங்கும் தெரு நாய்க்கு

Advertisement

கோட்டை கட்ட ஒரு திட்டம். 

நில்லாமல் நெடு வழியும்

நீண்ட நேய மனம்.

Advertisement

நல்லோர் புதிய யுகம் 

நாம் காண்போம் என்று குரல்.

நல்லாய்த்தான் இருந்தாலும்

Advertisement

நாங்கள் அதில் சேர்ப்பில்லை

ஓசோனில் ஓட்டை 

உலகெங்கும் மாநாடு

Advertisement

 தென் துருவ பனி கரைய

 திகைப்புடனே ஆய்ந்தறிவு

 பல நூறு ஆண்டு – முன்

Advertisement

 செத்த படு குழிக்கு

 மெத்த நூதனமாய் 

அகழ்வாய்வு ஒரு பக்கம்.

Advertisement

 நல்லாய்த்தான் இருந்தாலும்

 நாங்கள் அதில் சேர்ப்பில்லை,


Advertisement

 பூவுக்கும் காம்புக்கும்

 நோகாமல் பிடுங்கி எழ

 நூறுக்கும் மேலான

Advertisement

 நிபுணர் குழு கூட்டம்.

 காட ழிக்கக்கூடாது. 

கடல் அழியக்கூடாது.

Advertisement

 காட்டு விலங்குகளும்

 கவலை கொள்ளக்கூடாது.,

 நல்லாய்த்தான் இருந்தாலும் 

Advertisement

நாங்கள் அதில் சேர்ப்பில்லை, 

போர் செய்யக்கூடாது

புகை கூட ஆகாது

Advertisement

மாடிக்குடியிருப்பில் 

மண் தூசு ஆகாது

கூவி குழந்தைகளை

Advertisement

குலைய வைக்க கூடாது 

தாயும் குழந்தைகழும்

சங்கடம் கொள்ளாகாது,

Advertisement

ஐநா அறிக்கையது

அரசுகளின் கொள்கையது


Advertisement

நல்லாய்த்தான் இருந்தாலும்

நாங்கள் அதில் சேர்ப்பில்லை. 


Advertisement

 கொத்துக்குண்டுகளும்

 கோர ரசாயனமும் 

நித்தம் மனுவுடலை

Advertisement

 நின்றழிக்கும் நஞ்சுகளும் 

சித்தம் கலங்கிவிடும் 

செயல் கொண்ட 

Advertisement

அணு குண்டும் 

எத்திக்கும் தடை செய்வோம்

 எதிற்பவரை அழித்திடுவோம்,

Advertisement

 வாய் பேச்சும் வரைவுகளும் 


 நல்லாய்த்தான் இருந்தாலும்

Advertisement

 நாங்கள் அதில் சேர்ப்பில்லை,


 சுட்டு வீழ்த்திய என்

Advertisement

 விடலைமகன் தலை மீது

 சப்பாத்து கால் வைத்து

 தண்டோரா ஒருபக்கம்.

Advertisement


 நட்ட நடு இரவில்

 நடந்து ஊர்போன

Advertisement

 முத்தையா குடும்பம்

 செத்து மடிந்த கதை.


Advertisement

 குட்டி பெற இருந்த

 குஞ்சம்மா குடல் கிழிந்து

 கக்கி கரு நசிந்து

Advertisement

 ரத்தச்சகதியிலே தெருவோரம்.


 செத்துவிழுந்த தாயின்

Advertisement

 சிதைந்த உடலத்தை

 தெருவோரம் விட்டு

 விடை பெற்ற 

Advertisement

 பெருந்துயரம்,


 செத்த தாய் முலையில்

Advertisement

 சிதறிய தலையுடனே -பசி

 மெத்த எடுத்த பிஞ்சு

 பால் குடித்த பரிதாபம்,

Advertisement


செத்து பலர் நாட்கள்

 பதுங்கி இரு குழியில்

Advertisement

 ரத்தம் மலம் சகதி -மொத்தம்

 கலந்த நீர் குடித்து 

பசி தீர்த்த அநியாயம், 

Advertisement


 கொத்துக்கொத்தாக

 குஞ்சு தாய் தகப்பன்

Advertisement

 மொத்த பரம்பரையும் 

செத்து கருகிய துயர வரலாறு,


Advertisement

 எல்லாம் எம் தலையில் 

எவரும் இதில் சேர்ப்பில்லை, 

Advertisement

 – நாதன் கந்தையா-

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன