Connect with us

இலங்கை

தேர்தல் விதிமீறலுக்காக வவு.வில் மூவர் கைது!

Published

on

Loading

தேர்தல் விதிமீறலுக்காக வவு.வில் மூவர் கைது!

வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும். வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.

Advertisement

குறித்த விதிமுறையை மீறி, வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியாப் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன