இலங்கை
பாம்புக் கடிக்கு இலக்கான இளைஞன் சாவு!

பாம்புக் கடிக்கு இலக்கான இளைஞன் சாவு!
வவுனியா வடக்கு, நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இன்று புதன்கிழமை (27)காலை பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டிக்குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே பாம்பு கடிக்கு உள்ளாகிய நிலையில் நெடுங்கணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதே உயிரிழந்துள்ளர்.
தற்போது சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தையடுத்து பாம்பு மற்றும் விச பூச்சிகள் நீரில் அகப்பட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.