இந்தியா
பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த உதயநிதி ஸ்டாலின்

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த உதயநிதி ஸ்டாலின்
நாளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்.
நவம்பர் 27ம் திகதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘உதயநிதி உதயநாள் விழா’ என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் உதயநிதி, “தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஃபிளெக்ஸ் பேனர் வைப்பதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.