Connect with us

இலங்கை

மிக மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் : கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

Published

on

Loading

மிக மோசமான நிலையை எட்டிய காற்றின் தரம் : கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களில் உள்ளன.

Advertisement

காற்றின் தரக் குறியீடு அல்லது SL AQI இன் மதிப்பு 0 மற்றும் 50 க்கு இடையில் இருப்பதே சிறந்தது. அதற்கு மேல் 51 மற்றும் 100 க்கு இடையில் இருக்க வேண்டும். இது மிதமான அளவு ஆகும். 

ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் 101க்கும் 150க்கும் இடைப்பட்ட நிலையிலும், 151க்கும் 200க்கும் இடைப்பட்ட நிலையிலும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நகரின் காற்றின் தரத்தின் பெறுமதி நேற்று 104 ஆக இருந்தது, அது இன்று 108 முதல் 116 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இது தவிர, களுத்துறை நகரில் காற்றின் தர மதிப்பு இன்று 98 முதல் 104 வரை இருந்தது.

கண்டியின் காற்றின் தரம் 106 முதல் 114 ஆகவும், அனுராதபுரத்தின் காற்றின் தரம் 100 முதல் 118 ஆகவும் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 யாழ்ப்பாண நகரத்தில் காற்றின் தரத்தின் மதிப்பு இன்று 120ஐ நெருங்கியது.

Advertisement

தற்போதைய சூழ்நிலையில், உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு சம்பந்தப்பட்ட துறைகள் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன