இலங்கை
யானை தாக்கி இளைஞர் சாவு!

யானை தாக்கி இளைஞர் சாவு!
வவுனியா செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 24வயதுடைய வி.கேதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞரும் அவரது நண்பரும் நேற்றுக் காலை காட்டுப்பாதையூடாகச் சென்றபோதே வீதியின் கரையில் நின்ற யானை திடீரெனத் தாக்கியுள்ளது. இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)