உலகம்
வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர்

வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெற்ற கென்ய அதிபர்
கென்ய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீளப்பெறுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சட்டமூலத்தால் பல உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பு இழிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிபர் வில்லியம் ருட்டோ தெரிவித்துள்ளார். (ஏ)