Connect with us

இலங்கை

வவுனியாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!

Published

on

Loading

வவுனியாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!

பதவியாவைச்சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில்   அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. 

மேற்படி தாயார் மகப்பேற்று மருத்துவ நிபுணர் காமினி அவர்களால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் அவரது மகப்பேற்று மருத்துவ விடுதியாகிய 7ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் திலீபன் அவர்களினால்  அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

வவுனியாமருத்துவமனையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். 

மேலும்  தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதுடன், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ] 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன