இலங்கை
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களுக்கு அஞ்சலி

வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களுக்கு அஞ்சலி
வவுனியா விவசாயக் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணித்த ஐந்து மாணவர்களின் நினைவுநாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் குறித்த மாணவர்களுடன் கற்ற சக மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு வவுனியா விவசாயக் கல்லூரிக்கு அருகில் இராணுவ வாகனத்தின் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஐந்து இராணுத்தினர் கொல்லப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் மேற்கொண்ட தூப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கல்லூரி மாணவர்கள் ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)