Connect with us

இலங்கை

வாகனம் வாங்க விரும்புவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

Published

on

Loading

வாகனம் வாங்க விரும்புவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

2025 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கு உரையாற்றிய இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே,

எதிர்வரும் பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும், ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு ஒரு விஞ்ஞாபனமாக வாகன இறக்குமதியை அனுமதிப்பதாக ஒரு வார்த்தையை வழங்கியுள்ளது.

Advertisement

வாகனங்களை இறக்குமதி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம், இதன்மூலம் மக்கள் நியாயமான விலையில் நல்ல வாகனத்தைப் பெற முடியும்.

வாகன இறக்குமதிக்கான விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக நிதி அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.

இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 04 ஆண்டுகளாக அனாதரவாக உள்ளனர், இங்குள்ள வியாபாரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன